பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று (19) முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு,, கடவுசீட்டு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புறக்கோட்டை முதல் பத்தரமுல்லை நோக்கி சிறப்பு பேருந்து சேவை இன்று (19) இரவு முதல் செயல்படுத்தப்படும். இது, கடவுச்சீட்டு பெற விரும்புவோருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும், தினசரி 4000 பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் இதன் மூலம், அதிகமான விண்ணப்பதாரர்கள் விரைவில் பாஸ்போர்ட் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்படும் எனவும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.