மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மீது முன்னாள் பிரதி அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவமதிப்பு குற்றச்சாட்டு செய்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கின் தொடர்பில், கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (23) பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆஜரானார்.
அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், வழக்குத் தாக்கல் செய்த சிவனேசதுரை சந்திரகாந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன், தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதனால், எதிர்மறை தரப்புக்குச் செலவினமாக ரூ. 50,000 வழங்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கின் அடுத்தவிசாரணை வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஊடகங்களுக்கு தனது கருத்துகளை விளக்கமாக தெரிவித்தார்.
சாணக்கியனுக்கு ரூ. 50,000 வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
Date: