ஹஜ் பயணத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 2025ஆம் ஆண்டிலிருந்து குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபிய அரசு 2025 ஹஜ் புனிதப் பயணத்திற்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதால், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக ஹஜ் பயணத்தில் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2025 ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கும் போது, முன்பு ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.