நாட்டுக்கு பாதீடு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பாதீடாக ஒருசிலர் அடையாளப்படுத்தினாலும் அது நாட்டுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பாதீடாக அமைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (18) இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

2025ஆம் ஆண்டில் நூற்றுக்கு 05 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த இலக்கை பார்த்தால் இம்முறை அதிக நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியும். 05 ரில்லியன் ரூபா வருமான இலக்கு மற்றும் 2.3 சதவீத முதன்மை எல்லையை எதிர்பார்த்தாலும் எனது எதிர்பார்ப்புக்கமைய அந்தளவுக்கும் அப்பால் சென்ற செயற்பாடாகும்.

அதேபோன்று அரச பத்திரங்களுக்காக குறுகிய காலத்தில் உருவாகும் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பை ஏற்படுத்துவது அவசியமாகும். அதேபோன்று எமது நிதிக் கொள்கைக்கமைய நிலையான வட்டி சதவீதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும்.

ஒருசிலர் கூறுவது போன்று நாணய நிதியத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் பேசினால், பல வருடங்களாக நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும் ஒருவர் என்ற அடிப்படையில் இம்முறை நாடு என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சரியான பாதையில் பயணிப்பதற்காக வெளித் தரப்பினருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் மாற்றம் ஏற்படாது. நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் திசையில் மாற்றம் ஏற்படாமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனது நிலைப்பாட்டுக்கமைய இது கட்டாயம் இடம்பெற வேண்டிய விடயமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஸ்தரித்தன்மையை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் அளவுருக்களுக்கு ஏற்பட செயற்படுதல் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன் இது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தும் வரவுசெலவுத் திட்டமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...