கனடா, அமெரிக்கா மீது கூடுதல் வரிகள் விதிப்பது அல்லது அமெரிக்காவை 51ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளது.
இன்று (01) வெளியான தகவலின்படி, டிரம்ப் 20% வரி விதிக்கலாம் என்ற புகாரின் பேரில், கனடா அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
கனடா கூறியுள்ளதாவது, “அமெரிக்கா எங்கள் எரிபொருளை நம்பி தான் இயங்குகிறது. அதனால் கூடுதல் வரிகள் விதிப்பது சரியில்லை. அதுபோன்ற நிலையில் எங்கள் எரிபொருள் வழங்க முடியாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், “25% வரி விதிக்கும் பட்சத்தில், எங்களால் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க முடியாது” என்று கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கனடா, அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் வழங்கி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.