அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் தங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதற்குத் தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து, குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.