சுதந்திர தின நிகழ்வுகளுக்காக ரூ.80 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Date:

நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.

இம்முறை சுதந்திரத் தின நிகழ்வுகள் கொழும்பு – 07 இலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றவுள்ள இந்த தேசிய நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா மற்றும் முப்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாடப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மிகவும் எளிமையாக இந்த வருட நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்காக வேண்டிய வழமையாக காலி முகத்திடலில் இடம்பெறும் இந் நிகழ்வினை இந்த வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடத்த தீர்மானித்துள்ளோம்.

இந்த வருடம் 4,421 படையினர்கள் மாத்திரமே அணி வகுப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். கடந்த முறையினை விட இது மிகக் குறைவாகும். இதேவேளை, கடந்த முறை 19 ஹெலிகொப்டர்கள் சுதந்திர தினத்துக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் 03 ஹெலிகொப்டர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வுக்காக பல வீதிகளை மூடாமல் குறிப்பிட்ட சில வீதிகளை மாத்திரமே மூடத் தீர்மானித்துள்ளோம். பொதுமக்களின் நன்மை கருதியே இந்த அனைத்து தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின நிகழ்வு காரணமாக பொதுமக்களுக்கு சுமையினை ஏற்படுத்தக் கூடாது என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொத்மலை இறம்பொடை பஸ் விபத்து: 21பலி

கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கியுள்ளது. அதன்படி,...

புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று...

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் இராஜினாமா

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும்...