மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்துவருகிறது. அதேவேளை, கொங்கோவில் பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அவை பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை அடிக்கடி தாக்குகின்றன. இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், கொங்கோ பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை ஒழிக்க முயற்சிகளை தொடர்கின்றனர்.
இந்நிலையில், கொங்கோவின் தென்கிழக்கில் உள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (11) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலின் போது, கிராமங்களில் உள்ள வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.