நாட்டிற்கு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 100 மில்லியன் ரூபா மதிப்புள்ள 500,000 வலி நிவாரணி மாத்திரைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த மாத்திரைகள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபரை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.