இலங்கை கடற்படை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.
இந்த கைது, இன்று (26) காலை தலைமன்னாருக்கு வடக்கில் உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நடைபெறியுள்ளது. மூன்று மீன்பிடி படகுகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவதாக கடற்படை அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் இரணைதீவிற்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.