அமைச்சரவைப் பத்திரத்தையும் விரைவில் சமர்ப்பிக்கப்படும்

Date:

மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வ தற்குத் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அறிவித்துள்ளது.

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, தொழில் அமைச்சு, தெங்கு ஆராய்ச்சு நிறுவனம், தென்னை பயிர்ச்செய்கை சபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேங்காய் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஸ்ரீ லங்கா தேங்காய் தொழில் சபை ஆகியன இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.

அந்தக் கலந்துரையாடலின்போதே, தேங்காய்க்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக தேங்காய் தொகையை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்ட மற்றும் சமூக கூட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

அதற்கான அமைச்சரவை அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த 200 மில்லியன் தேங்காய்களை தேங்காய் பால், தேங்காய் மா மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் என்று மூன்று வகைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீள் ஏற்றுமதிக்காக மாத்திரமே இந்த இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரினால் இதுதொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அவசியமாக தேங்காய் தொகை அந்தக் குழுவினால் பரிந்துரை வழங்கப்படும் என்பதுடன் அந்த பரிந்துரைகள் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளரினால் தொழில் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அந்தக் குழுவின் அனுமதிக்கமைய தேங்காய் தொகை இறக்குமதி செய்யப்படும்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தென்னை தொழிற்றுறைக்கு அவசியமான தேங்காய்கள் பற்றாக்குறையாகவே இருக்கும் என்பதால் இந்த தொழிற்றுறையை பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக கொப்பரா தேங்காய் அல்லாத உலர்த்தப்பட்ட அல்லது துண்டுகளாக்கப்பட்ட தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான தொகை குழுவினால் தீர்மானிக்கப்படும். தேசிய நுகர்வுக்கான இந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்றுறைக்கு தேவையான மூலப்பொருட்கள் வரி நிவாரணத்தின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அமைச்சரவைப் பத்திரமும் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போராட்டம் நடத்த தடை

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...