நடப்பாண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

Date:

நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் 5 வரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் நடத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸார் 68 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட T-56 ரக 6 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இந்தக் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட எட்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓய்வூதியச் சட்டத்தை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு...

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம்...

கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல்...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...