நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக எல்லை தாண்டியதாகக் குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், இரு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்டபோது பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்ந்த விசாரணைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.