யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விதண்டாவாதமாக கேள்விகளை எழுப்புகின்றார் என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேறும் படி அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அக் கலந்துரையாடலில் அதிகாரிகளை விமர்சித்து உள்ளார்.
இந் நிலையில் அவரை வெளியேறும் படி அதிகாரிகள் தெரிவித்த வேளையில் அங்கே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சரும் ஆன இராமலிங்கம் சந்திரசேகர் தலையீட்டின் பின்பு அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கே கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விளக்கமளித்து இருந்தார்.
அத்துடன் கூட்டத்தில் சார்பான விடயங்களை தாண்டி பிழைகளையும் சுட்டிகாட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.