சட்டவிரோதமாக ட்ரக் வண்டி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் 30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் ரூ.200, 000 சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கை அடுத்த மாதம் 6 ஆம்திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.