இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் லொறி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரியிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இங்கிரிய – அக்கர 20 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதோடு சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.