யாழில் பரவும் மர்ம காய்ச்சல் அதாவது எலிக்காய்ச்சல் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனை மூலமாக அடையாளம் காணப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதியளித்துள்ளது.
யாழ். வைத்தியசாலையில் பலியானவர்களின் இரத்த மாதிரி பரிசோதனை அடிப்படையில் அவர்கள் சிலபேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
பலியான 7 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பரவிய எலிகாய்ச்சல் தொடர்பாக நேற்று 11ம் திகதி ஊடகவியலாளர்களிடம் பேசிய வைத்தியர் சத்தியமூர்த்தி இந்த காய்ச்சல், சுவாசகோளாறு காரணமாக இவ்வாறான மரணம் இடம்பெற்றதாகவும் பலியானவர்கள் 20 – 65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.