மெட்டா நிறுவனத்தின் 5 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக ‘மெட்டா’ இயங்கி வருகிறது.
இதன் மூலம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களையும் நிர்வகித்து வருகிறதோடு, உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தில் 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தை சீரமைக்கும் வகையில் 5 சதவீதம் அதாவது 3,600 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாராகி வருகிறதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
பெயர் பட்டியலில் உள்ள நபர்கள் பெப்ரவரி 10ஆம் திகதிக்குள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்படுவார்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.