முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, சட்டவிரோதமான முறையில் ட்ரக் வண்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், வலான ஊழல்
தடுப்புப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழைமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்ட விதிகளுக்கு முரணாக ட்ரக் வண்டி பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடர்வதால், முன்னாள் அமைச்சர் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.