சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் மஹியங்கனையில் உள்ள பல வீதிகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்போது, தென்னேகும்புர – ரிகில்லகஸ்கட – ராகல வீதி மற்றும் கண்டி-மஹியங்கனை-படியதலாவ போன்ற வீதிகள் மூடப்பட்டுள்ளன.
அப்பகுதியிலுள்ள பாறைகளின் பகுதி அகற்றப்படும் வரை, சாலை மேற்பரப்பில் இருந்து பாறைகளை அகற்றுவது ஆபத்தானது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக, இந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு வீதி மேம்பாட்டு அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.