யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அனுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று(21) நடைபெறும் பாராளுமன்ற அமர்விற்காக கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி மற்ற போக்குவரத்திற்கு இடையூறாக வாகனம் ஓட்டியதற்காக பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன் விளைவாக, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பொலிஸார் அர்ச்சுனாவின் அடையாள அட்டையைக் கோரியுள்ளனர்.
இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் இணங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.