பொலன்னறுவை – மனம்பிட்டியவுக்கான ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே திணைக்களம் கடந்த 19 ஆம் திகதி முதல் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் ரயில் சேவையை ஆரம்பித்தது.
இதற்கமைய, பொலன்னறுவை-மானம்பிட்டி ரயில் சேவையை இன்று (21) காலை முதல் பொலிஸார் போக்குவரத்துக்கு திறந்துவிட்டதால், அதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.