மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அதன்படிஇ ஒரு ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை அதிகபட்சமாக 1 ரூபாய் 65 சதத்திற்கு விற்க முடியும்.
மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மாற்றுவதற்கான விதிமுறைகள் இயற்றப்படும் என்று துணை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்துகளுக்கான புதிய விதிமுறைகள் விதிக்கப்படுவதால், மருந்துகளின் விலைகள் துறைமுகத்திலேயே நிர்ணயிக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் ஒவ்வொரு மருந்துப் பொருளுக்கும் விலை கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முறையாக செயல்படுகிறதா என்பது தொடர்பில் விசாரிக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.