அசோக ரங்வலவின் இராஜினாமாவினால் வெற்றிடம் ஆகி உள்ள சபாநாயகரின் பதவிக்கான நியமனம் எதிர்வரும் 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூட உள்ள வேளையில் அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பில் வேட்புமனுக்கள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகரொருவர் பதவி விலகுவது இதுதான் முதல் தடவை என்று பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்பு சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.