இரகசியத்தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவானது அகதி தஞ்சம் கோரிய இலங்கை தமிழர்களுக்கு, நரகத்தைக் காட்டிய ஒரு இந்தியப் பெருங்கடல் பகுதி என்று, சர்வதேச அமைப்புக்கள் பலவற்றாலும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட குறித்த தீவில், அகதி தஞ்சம் கோரிய மக்கள் மாதக்கணக்கில் சிக்கித் தவித்தனர்.
இலங்கையின் உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் நிலைமை காரணமாக தஞ்சம் கோரி கனடாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை தமிழர்களின் படகு இடையில் பழுடடைந்ததன் காரணமாக இவர்கள் டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைய வேண்டி ஏற்பட்டது.
அந்த வகையில் கிட்டத்தட்ட மூன்று வருடகாலமாக டியாகோ கார்சியாவில் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொண்ட துயரம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இலங்கை தமிழரான சுப்பையா அரவிந்த் தமது கடந்த நினைவுகளை எம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.
மேலும், புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக குறித்த தீவில் மாட்டிக்கொண்ட தமது குழுவுக்கு , காலம் செல்ல செல்ல அங்குள்ள அடிப்படை விடயங்கள் புரிய ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.