கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வியாழக்கிழமை (16) மாலை 6.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (17) காலை 6.00 மணி வரை 12 நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.