நாமலை ஆஜராகுமாறு உத்தரவு

Date:

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் (LTTE) முகநூல் பக்கத்தைப் பரப்பியதாகவும், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தகவல்களைப் பரப்பியதாகவும் கூறப்படும் சந்தேக நபரான “நாமல் குமார”வை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு தலைமை
நீதவான் தனுஜா லக்மாலி நீர்கொழும்பு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, சி.ஐ.டியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த புகாரை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் நாமல் குமார சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு, இவைபோன்ற குற்றத்தைச் செய்ததற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தைக் கோரியது.

சந்தேக நபரான அத்தநாயக்க முதியன்செலகே நாமல் குமார, தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும், தனது மனைவியின் தாயாரின் பெயரிலும் வாங்கப்பட்ட தொலைபேசி சிம் கார்டுகளைப் பயன்படுத்தி பேஸ்புக் சமூக ஊடகக் கணக்குகளைப் பராமரித்து வருகிறார்.

இதற்கமைய, விடுதலைப் புலிகள் அமைப்பின் கோஷங்கள், செயல்பாடுகள் மற்றும் பிற தகவல்களை ஊக்குவிக்கும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இதனால் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது. விசாரணையில் அவர் தனது பெயரிலும் பிற புனைப்பெயர்களிலும் இயக்கப்படும் பேஸ்புக் சமூக ஊடக கணக்குகளை கையாண்டது தெரியவந்ததால் புகார் அளிக்கப்படுவதாக சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாமல் குமாரவின் மனைவி மற்றும் மனைவியின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், அவர்களின் கூற்றுப்படிஇ நாமல் குமார அனைத்து சிம் கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய கண்காணிப்பு தகவல்களை விசாரித்து, பேஸ்புக் சமூக வலைப்பினை இயக்கும் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று, அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறை மேலும் தெரிவித்துள்ளது.

புகாரின் உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதவான்இ பெப்ரவரி 23ஆம் திகதி சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு, அதுவரை விசாரணையை ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும்...

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை...