நாட்டினுடைய 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

நாட்டில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் சுமார் 10,000பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், ஆண்டுதோறும் எலிக்காய்ச்சலால் 120 முதல் 200 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வகை தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் உடலில் படும் போதும், பக்டீரியா கிருமிகள் கலந்த தண்ணீரைக் குடிப்பதாலும் எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

குளிர்க்காய்ச்சல், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை இந் நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றன.இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு மக்களை எச்சரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போராட்டம் நடத்த தடை

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...