குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்து உள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று 14ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்று உள்ளது.
இந்நிலையில் எம்.பி அர்ச்சுனா கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,
யாழ் போதனா வைத்தியசாலையில் 15 நுழைவாயில்கள் உள்ளன. நோயாளிக்கு மாத்திரம் இன்றி பல உயர் அதிகாரிகளும் அவர்களினை தொடர்பு கொண்டு சேவைகளை பெறுகின்றனர்.
வைத்தியசாலை நோயாளிகளை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறாக இருக்க அதனை விடுத்து எம்மை அச்சுறுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்கிற எவரும் அல்லது கடவுளாக இருந்தாலும் உள்ளே வர அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.