துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு திரும்பினார்

Date:

திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வாரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா
தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (16) சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையைத் தொடர்ந்து துமிந்த
சில்வாவை மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டடுள்ளதோடு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (10) வெலிக்கடை சிறைச்சாலையின் பொதுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் (ஜனவரி 11) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனவரி 15 ஆம் திகதி வரை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையைத் தொடருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியதை
அடுத்துஇ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) அவர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016ஆம்
ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய துமிந்த சில்வா,
ஆரம்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நேரத்தில் கணிசமான பகுதியை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கழித்தார்.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்ட பின்னர் அவர் ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையில் வசதியான அறையில் தங்க வைக்கப்பட்டார்.

துமிந்த சில்வாவிற்கான இந்த ஏற்பாடு பொதுமக்களின் விமர்சனத்தைத் ஏற்படுத்தியதோடு முன்னாள் எம்.பி.க்கு முன்னுரிமை சிகிச்சை மற்றும்
சலுகைகள் வழங்கப்பட்டதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கெரி ஆனந்தசங்கரிக்கு புதிய அமைச்சு பதவி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி...

முன்னாள் விவசாய அமைச்சர் முன்பிணை கோரி மனு தாக்கல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 2021 ஆம் ஆண்டில்...

கொத்மலை பஸ் விபத்து: இழப்பீடு பணம் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஏற்பட்ட பஸ் விபத்தில்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பாண்டில் இதுவரை 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...