தீப்பந்த போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

Date:

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் தமது வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்து நேற்று 12ம் திகதி மாலை 6.30 மணியளவில் தீப்பந்த போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்

வளாகத்தின் ஒரு பக்க வாயிலில் ஆரம்பித்த இந்த போராட்ட பேரணி கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 600M தூரம் மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு நடந்து வந்து பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் வேளை போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், திருகோணமலை வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரியும், வளாகத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நீக்க கோரியும், மகாபொல கொடுப்பனவு தொடர்பாக கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் திருகோணமலை வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்த வேளையில், இன்று 13ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் 300 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தங்களுடைய கோரிக்கைகளிற்கு குரல்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இறம்பொடை பகுதியில் வேன் விபத்து: 11 பேர் காயம்

இறம்பொடை, கெரண்டிஎல்ல பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று...

தற்காலிகமாக மூடப்படவுள்ள ரயில் பாதை

களனிவெளி ரயில் பாதையில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு...

கெரி ஆனந்தசங்கரிக்கு புதிய அமைச்சு பதவி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி...

முன்னாள் விவசாய அமைச்சர் முன்பிணை கோரி மனு தாக்கல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 2021 ஆம் ஆண்டில்...