இவ் ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்து உள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகம் ஆனோர் வருகை தந்து உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2.2 மில்லியன் எனும் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ் இலக்கை எட்டிய பின்பு 2018 ஆம் ஆண்டிற்கு பின்பு 2 மில்லியன் இலக்கை எட்டுவது இது முதல் முறை ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.



