சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சபாநாயகரின் கல்வித்தகைமை குறித்து சர்ச்சையில் அமைதி காப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே கேள்வி எழுப்பி உள்ளார்.
இவ் அரசியல் கலாசாரத்தினை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், சபாநாயகர் பதவிக்கான கௌரவம் மலினப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் குற்றம் சுமத்தி உள்ளார். கொழும்பில் இன்று 13ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் பிரிவினவாத எண்ணக்கரு பகிரங்கமாக வெளிப்படுகின்ற வேளையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டு உள்ளது
பொதுத்தேர்தலின் போது மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அனைவரும் கவனம் செலுத்தி உள்ள பின்னணியில் மஹிந்தவின் பாதுகாப்பு தரப்பிலிருந்து 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டு உள்ளமை முறை அற்ற ஒரு செயற்பாடு ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.