சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் கட்டைகாடு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் படி இன்று 13ம் திகதி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ் வேளை சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 27 லீற்றர் கசிப்பும் 120 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையபொருட்கள் அனைத்தையும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.