கொலை குற்றச்சாட்டில் கனடாவில் கைதான யாழ் நபர்

Date:

இலங்கையில் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் குழுவான ஆவாவின் தலைவர் என கருதப்படும் பிரசன்னா நாகலிங்கம் கொலை குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்சிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கின்றார்.

இலங்கையிலிருந்து பிரான்சிற்கு தப்பியோடிய பின்னர் பிரசன்னா நாகலிங்கம் , இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார்.

கனடாவின் நீதிதிணைக்களம் தகவல்

இந்நிலையில் 2022 செப்டம்பரில் அபிராமன் பாலகிருஸ்ணன் என்பவரை கொலை செய்தமை தொடர்பிலும் மற்றைய ஒருவரை காயப்படுத்தியமை தொடர்பிலும் பிரசன்னாவை நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவின் நீதிதிணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது. சந்தேகநபர் அஜந்தன் சுப்பிரமணியம் எனவும் அழைக்கப்படும் பிரசன்னா நாகலிங்கம் இலங்கையின் ஆவா குழுவின் தலைவர் என கருதப்படுகின்றார் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆவா என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கிய தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் குழு. ஆவா குழு தனது போட்டி குழுவான எல்சி போய்ஸ் என்ற குழுவை இலக்குவைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகரின் வடபகுதி புறநகர் பகுதியில் உள்ள லகோர்னவை தமது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருவதற்காக இந்தஇரண்டு குழுக்களும் மோதலில் ஈடுபட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் நாகலிங்கமும் அவரது ஐந்து சகாக்களும் தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு கத்திகள் உட்பட கூரான ஆயுதங்களை பயன்படுத்தி 2022 செப்டம்பர் 22ம் திகதி லகோர்னவ் பகுதியில் வாகனத்திலிருந்த இருவரை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...