முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று முற்பகல் முன்னிலையாகினார்.
கதிர்காமத்தில் உள்ள காணிப் பிரச்சினை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதாகத்
தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.