கேகாலை, வரகாப்பொல மாயின்னொலுவ பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளதாக வரகாப்பொல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று 12ம் திகதி இரவு இடம்பெற்று உள்ளது. சம்பவத்தில் மாயின்னொலுவ தொரவக்க பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இத் தாக்குதல் இடம்பெற்று உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வரகாப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.