உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு டிங் லிரென் இடையே கடுமையான போட்டி நிலவி வந்துள்ளது.
13 ஆவது சுற்று வரை இருவரும் சமபுள்ளிகளில் இருந்ததால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் இன்று நடந்த 14 ஆவது சுற்றில் விளையாடிய குகேஷ் 58 ஆவது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தியுள்ளார்.
மேலும் இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பின்பு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் 2 ஆவது தமிழக வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்று கொண்டுள்ளார்.