உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஞாயிற்றுக்கிழமை (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி.அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.