இலஞ்சம் கோரிய அதிபருக்கு விளக்கமறியல்

Date:

பாடசாலையில் முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் தனது பாடசாலையில் மாணவனை சேர்ப்பதாயின் பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் கேட்டுள்ளார்.

இந்தநிலையில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20)
உத்தரவிட்டுள்ளது.

பாடசாலையில் பிள்ளையொன்றைச் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்து பைகளுக்கான தொகையை, பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வியாபாரிக்கு செலுத்துமாறு முறைப்பாட்டாளரிடம் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும்...

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை...