எந்த காரணத்தை கொண்டும் எவ் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமான அப் பொறுப்பை இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் ஏற்று கொண்டுள்ளதாகவும் தலைவர் ஜனக ராஜகருணா கூறியுள்ளார்.
நாட்டிற்கு எந்த வித சிக்கலுமின்றி வலுசக்தியின் அவசியத்தை பேணுவதற்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது எரிபொருள் குறைவடைந்தும் உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலிய கூட்டுதாபனத்தால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம், பெற்றோலிய கூட்டுதாபனம் ஆகியவை ஒன்றிணைந்து இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.