வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறி உள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் கரையோர பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளைகளில் மழை பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலைமை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்பட கூடிய பாதிப்புகளினை குறைத்து கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும் படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.