இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசக்கிடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று இடம்பெற்றது.

பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து இங்கு இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, அருகிலுள்ள அண்டை நாடு என்ற வகையில் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டுஇ வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.