அஸ்வெசும சலுகையை அதிகரிக்கும் திட்டத்திற்கு பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை 17,500 ரூபாவாகவும், 8,500 ரூபாய் உதவித்தொகையை 10 ஆயிரம் ரூபாவாகவும், ரூ. 2,500 உதவித்தொகையை 5000 ஆகவும் உயர்த்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.