அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 2 சிறுமிகள் பலி

Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் நேற்று முன்தினம் 11ம் திகதி இரவு இடம்பெற்று உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொட்டாவை, பாலட்டுவ இடையே பயணித்த காரொன்று சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் முன்னால் சென்ற லொறியின் பின்புறம் மோதியதினால் இவ் விபத்து ஏற்பட்டு உள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை, இரண்டு மகள்களும் படுகாயம் அடைந்துள்ள வேளையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு 10 வயதுடைய மகள் உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றைய சிறுமி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் உயிரிழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...